Wednesday, July 13, 2011

என் இனிய நன்பர்களே......


நட்புக்கு கூட கற்புகள் உண்டு மச்சான்............


ஒன்பதரை மணி காலேஜிக்கு

ஒவ்வொத்தனா கிளம்பும் போதும்

ஒருதன் மட்டும் தூங்கிகிட்டு இருபான்

ஒன்பது இருபது ஆகும் வரை




அடிச்சு பிடிச்சு கிளம்புறபோ

அரை குறையா குளிச்சிட்டு

பத்து நிமிஷ பந்தயதுல

பட படன்னு சாப்பிட்டு



பதட்டதோடு சாப்பிட்டாலும்

பந்தயதுல தோத்தது இல்ல

லெட்டா வர நன்பணுக்கு

பார்சல் மட்டும் மறந்தது இல்ல!



விறுவிறுன்னு நடந்து வந்து

காலேஜ் Gate நெருங்குறபோ

வெறுபடிக்குதுடா மச்சான்-னு

ஒருதன் புலம்பி தொலச்சாக்கா

வேற எதுவும் யொசிக்காம

வேகவேகமா திரும்பிடுவோம்

வேட்டியா ரூம்ல அரட்டை அடிக்க

இல்ல 'வெற்றி' தியேட்டர்ல படம் பார்க்க !!!!!!

கஷ்ட்ப்பட்டு காலேஜிக்கு போனா

கடங்கார PROFESSOR கழுத்தறுப்பான்

Assignment எழுதாத பாவத்துகு

நாள் முழுதும் நிற்க வச்சு காக்கவைபான்..........





கேலி கிண்டல் பஞ்சமில்ல

கூத்து கும்மளம் குறையுமில்ல

எல்லாருக்கும் சேத்துதான் Punishment ன்னா

H.O.Dய கூட விட்டதில்ல!.......





ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா

அத அடிப்பான் காபி அந்தபக்கம்

ஒருதன் மட்டும் படிச்சிட்டு வந்து

ஒன்பது பேர் பாஸ் ஆனதுண்டு..................






பசியில யாரும் தவிச்சதில்ல

காரணம் - தவிக்க விட்டதில்ல

டீக்கடையில கடன்வச்சு குடிச்சாலும்

சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல.......







அம்மா அசையா போட்ட சேயினும்

மாமா முறையா போட்ட மொதிரமும்

Fees கட்ட முடியாத நன்பனுக்காக

அடகு கடை படியேற அழுததில்ல............





சட்டைய மாத்தி போட்டுக்குவோம்

சாதி சமயம் பாத்ததில்ல

மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்

முகவரி என்னன்னு கேட்டதில்ல................






படிச்சாலும் படிக்கலன்னாலும்

பிரிச்சு வச்சு பார்த்ததில்ல

அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்

அந்தஸ்த்து பார்த்த ஞாபகமில்ல.........................





வேலை தேடி அலையுப்போ

வேதனைய பார்த்துப்புட்டோம்

வேட்டி ஆபிஸார் னு நெஜமாவே

மாறி மாறி சிரிச்சிகிட்டோம்...........





ஒருதன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு

ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ

மனசு கட்டபொம்மனா ந்ண்பனுக்கு நன்றி சொல்ல

கண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும்

பக்குவமா இத கண்டும் காணாம

ந்ண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ

சாப்பாட்ல காரம்டா மாச்சான்'னு

சமாளிச்சி எழுந்து போவோம்...................



நாட்கள் நகர

வருஷங்கள் ஓடுது

எப்போதாவது மட்டும் தான் இ-மெயிலும் வருது

Hi da machaan, How are you???வுன்னு.....................




தங்கச்சி கல்யாணம்,

தம்பி காலேஜ்,

அக்காவோட சீமந்தம்

Personal loan interest

Housing Loan EMI

Share Market சருக்கல்

appraisal tension

இந்த கொடுமையெல்லாம் பத்தாம

இன்னிக்காவது பேச மாட்டாளா'ன்னு

இஞ்சி மறப்பா போல ஒரு காதல்............................






எப்படியோ வாழ்கை ஓடுது ஏடாகூடமா

நேரம் பார்க்க நேரமில்ல போதாகாலமா....................





E-Mail இருந்தாலும்

Internet இருந்தாலும்

கம்பெனியில ஓசி Phone இருந்தாலும்

கையில Calling Card இருந்தாலும்

நேரம் மட்டும் கிடைக்கிறது இல்ல

ந்ண்பனோட குரல கேக்க

நெனச்சாலும் முடியறதில்ல

பழையபடி வாழ்ந்து பாக்க.........................






அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்

Orkut இருந்தும் Scrap பன்ன முடியாம போனாலும்

'Available' ன்னு தெரிஞ்சும் Chat பன்ன முடியாம போனாலும்

'ஏண்டா பேசல'? ன்னு கோச்சிக்க முடியல

இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல....................................





என் தோழர்கள்

தேசம் கடந்து போனாலும்

பாசம் மறந்து போகாது !

பேசக் கூட மறந்தாலும்

வாசம் மாறி போகாது !

வருஷம் பல கழிஞ்சாலும்

வரவேற்பு குறையாது

வசதி வாய்ப்பு வந்தாலும்

"மாமா" "மச்சான்" மாறாது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!